districts

img

இயற்கை உரம், மண்புழு உரம்  விற்பனை மையம் திறப்பு  

தஞ்சாவூர், டிச.15-  தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பேருந்து நிலை யத்தில், விவசாயிகளுக்கு தேவையான திடக்கழிவு மேலாண்மை திட்ட இயற்கை உரம், மண்புழு உரம் மற்றும் மரக்கன்றுகள் விற்பனை மையத்தினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார். நிகழ்வில், பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் பிரசுந்தநாயகி, துப்பரவு மேற்பார்வையாளர் வெங்கடசேன், பேரூ ராட்சி துணைத் தலைவர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.